பந்தலூரை அடுத்துள்ள சேரம்பாடி அரசு உயர்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டத்திலுள்ள சேரம்பாடி அரசு உயர்நிலைப் பள்ளயில் 1998ஆம் ஆண்டு 8, 9, 10ஆம் வகுப்புகளில் படித்த தமிழ் மற்றும் மலையாள வழி மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. முன்னதாக, கல்வி விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. தொடர்ந்து, முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் சந்திப்பு, கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. ஓய்வுபெற்ற ஆசிரியர் ராஜ்குமாரை மாணவர்கள் கெளரவித்தனர்.