கூடலூரை அடுத்துள்ள நெலாக்கோட்டை பஜாரில் இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஒற்றை யானை நடமாடியதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம், பந்தலூர் வருவாய் வட்டத்திலுள்ள நெலாக்கோட்டை பஜாரில் கடந்த வெள்ளிக்கிழமை காலை நேரத்தில் ஒற்றை யானை நடமாடியது.
கூடலூர்-சுல்தான் பத்தேரி சாலையில் யானை நீண்ட நேரம் உலவியது. பின்னர், அரசு மேல்நிலைப் பள்ளி பகுதியில் தாழ்வான சோலையிலுள்ள நீர்நிலை பகுதிக்குச் சென்றது.
இந்நிலையில் அந்த யானை பஜார் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை மீண்டும் உலவியது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.