கூடலூர் அருகே 2ஆவது நாளாக நடமாடிய ஒற்றை யானை

கூடலூரை அடுத்துள்ள நெலாக்கோட்டை பஜாரில் இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை அதிகாலை

கூடலூரை அடுத்துள்ள நெலாக்கோட்டை பஜாரில் இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஒற்றை யானை நடமாடியதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம், பந்தலூர் வருவாய் வட்டத்திலுள்ள நெலாக்கோட்டை பஜாரில் கடந்த வெள்ளிக்கிழமை காலை நேரத்தில் ஒற்றை யானை நடமாடியது.
கூடலூர்-சுல்தான் பத்தேரி சாலையில் யானை நீண்ட நேரம் உலவியது. பின்னர், அரசு மேல்நிலைப் பள்ளி பகுதியில் தாழ்வான சோலையிலுள்ள நீர்நிலை பகுதிக்குச் சென்றது.
இந்நிலையில் அந்த யானை பஜார் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை மீண்டும் உலவியது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com