மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி: 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

உதகையில் மாவட்ட அளவில் நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் சனிக்கிழமை பங்கேற்றனர்.


உதகையில் மாவட்ட அளவில் நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் சனிக்கிழமை பங்கேற்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் சதுரங்க விளையாட்டுச் சங்கம் சார்பில் பள்ளி மாணவ, மாணவியருக்கு இடையேயான சதுரங்கப் போட்டி நடத்துவது வழக்கம். இதேபோல் இந்த ஆண்டும் உதகையில் உள்ள தனியார் பள்ளியில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவியருக்கான மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி நடைபெற்றது.
போட்டியில் அரசுப் பள்ளியில் இருந்து அதிக மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்ட இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுக் கோப்பையும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. 
இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர் மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ள மாவட்ட சதுரங்க விளையாட்டுச் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com