உதகையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்

உதகையில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை  நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள்

உதகையில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை  நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் 164 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பெற்றுக் கொண்டார்.
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமையில், மக்கள் குறைதீர் நாள் கூட்டம்  திங்கள்கிழமை  நடைபெற்றது. 
இக்கூட்டத்தில் குடும்ப அட்டை, வீட்டுமனைப் பட்டா, தொழில் கடனுதவி, கல்விக் கடன் உதவி, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, குடிநீர் வசதி, கழிப்பிடம், மின்சார இணைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 164 மனுக்கள் மக்களிடமிருந்து பெறப்பட்டன. 
பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுக்களின் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பரிசீலனை செய்து, தகுதி இருப்பின் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஆட்சியர்  உத்தரவிட்டார்.  கடந்த குறைதீர் நாள் கூட்டத்தில் தீர்வு காணாமல் நிலுவையிலுள்ள மனுக்களின் மீதும் விரைவான  நடவடிக்கை எடுக்குமாறு அரசு அலுவலர்களை ஆட்சியர் வலியுறுத்தினார்.
இந்த மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில், சமூகநலத் துறை சார்பில் முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 13 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ. 5.62 லட்சம்  மதிப்பிலான காசோலைகளை  ஆட்சியர் வழங்கினார்.  இதில், சமூக பாதுகாப்புத் திட்ட தனி துணை  ஆட்சியர் கண்ணன்,  கலால் துறை உதவி இயக்குநர் பாபு,  மாவட்ட ஆதிதிராவிடர்- பழங்குடியினர் நல அலுவலர் மணிவேலன், பிற்படுத்தப்பட்டோர்- சிறுபான்மையினர் நல அலுவலர்  முகமது குதுரதுல்லா, மாவட்ட வழங்கல் அலுவலர் கணேஷ்,  மாவட்ட சமூகநல அலுவலர் தேவகுமாரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com