கூடலூர், பந்தலூர் பகுதிகளில் கனமழை:  இரண்டாவது நாளாக மின்தடை

தொடர் கனமழை பெய்வதாலும், சூறாவளிக் காற்று வீசுவதாலும் இரண்டாவது நாளாக கூடலூர், பந்தலூர் பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன.

தொடர் கனமழை பெய்வதாலும், சூறாவளிக் காற்று வீசுவதாலும் இரண்டாவது நாளாக கூடலூர், பந்தலூர் பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன.
நீலகிரி மாவட்டம், கூடலூர், பந்தலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறாவளியுடன் கனமழை பெய்வதால் பல இடங்களில் மரங்கள் சாலையின் குறுக்கே விழுந்துள்ளன. இதனால்  போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 
மேலும் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததால் மின்கம்பிகள் அறுந்து விழுந்துள்ளன. இதனால் தொடர்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. 
இந்தப் பகுதி முழுவதும் இரண்டாவது நாளாக இருளில் மூழ்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com