பாட்டவயலில் எரியாத தெருவிளக்குகள்

கூடலூரை அடுத்துள்ள பாட்டவயல்- கைவட்டா பகுதியில் கடந்த சில மாதங்களாக தெருவிளக்கு எரியாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

கூடலூரை அடுத்துள்ள பாட்டவயல்- கைவட்டா பகுதியில் கடந்த சில மாதங்களாக தெருவிளக்கு எரியாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
பாட்டவயல் அருகே கைவட்டா பகுதியிலிருந்து ஈட்டிப்படி பகுதி வரையிலுள்ள சாலையில் கடந்த சில மாதங்களாக தெருவிளக்குகள் எரியாததால் இப்பகுதி இருளில் மூழ்கியுள்ளது. சாலையின் ஒருபுறம் குடியிருப்புகளும் மறுபுறம் காடுகளும் நிறைந்துள்ளதால், வனவிலங்குகள் இங்கு நடமாடுகின்றன. எனவே இப்பகுதி மக்கள் மாலை நேரத்தில் இந்தச் சாலையில் நடமாடவே அஞ்சுகின்றனர். 
பொறுப்புள்ள அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தெருவிளக்குகளைச் சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com