தமிழக அரசால் தொடங்கப்பட்டுள்ள எல்.கே.ஜி., யூ.கே.ஜி. ஆசிரியர்களுக்கு அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டது.
கூடலூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கூடலூர் வட்டார வள மையம் சார்பில் ஏற்பாடு செய்திருந்த பயிற்சி வகுப்பில் வட்டாரக் கல்வி அலுவலர் வெள்ளிங்கிரி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் முருகேசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதில் நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ருக்மணி கலந்துகொண்டு ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்தார்.