கூடலூரில் முதியோருக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்ட சமூக நலத்துறை, சத்துணவுத் திட்டம், ராமகிருஷ்ணா முதியோர் இல்லம் ஆகியன இணைந்து பாத்திமா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின.
இந்நிகழ்ச்சிக்கு ராமகிருஷ்ணா முதியோர் இல்ல இயக்குநர் வசந்தகுமாரி தலைமை வகித்தார்.
கூடலூர் கோட்டாட்சியர் கே.வி.ராஜ்குமார் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, முதியோருக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழியை வாசிக்க, மாணவர்களும், ஆசிரியர்களும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் பிரபஞ்சனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.