கூடலூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த ஜீப் வீட்டின் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் முதியவர் திங்கள்கிழமை காயமடைந்தார்.
கூடலூர் அடுத்துள்ள கோழிப்பாலம் கல்லூரி அருகே உள்ள வளைவானப் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தாழ்வான பகுதியிலிருந்த வீட்டின் மீது ஜீப் கவிழ்ந்தது.
இதில் வீட்டின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்தது. மேலும் வீட்டிலிருந்த மொய்தீன் குட்டி (80) காயமடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, கூடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விபத்தில் ஜீப்பை ஓட்டி வந்த மணிகண்டன் என்பவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.