உதகை, குட்ஷெட் சாலையில் பொது சுகாதாரம் குறித்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா செவ்வாய்க்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அப்பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய்களில் அடைப்புகள் ஏற்பட்டு கழிவுநீர் தேங்கியிருப்பதைக் கண்ட அவர், அங்குள்ள அரசு மதுக் கடையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளே கால்வாயை அடைப்புக்கு காரணம் என்பதைக் கண்டறிந்தார். இதைத் தொடர்ந்து, அந்த மதுக்கடைக்கு "சீல்' வைக்க உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது உதகை நகர்மன்ற பொறியாளர் சி.ரவி, நகர்நல அலுவலர் டாக்டர் முரளி சங்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.