நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உள்ள எடப்பள்ளி பகுதியில் சாலையின் குறுக்கே மரம் விழுந்ததால் அப்பகுதியில் செவ்வாய்க்கிழமை சிறிது நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.
குன்னூர் பகுதியில் கடந்த சில நாள்களாக காற்றுடன் அவ்வப்போது சாரல் மழை பெய்து வந்தது. இந்நிலையில் குன்னூர் - கோத்தகிரி சாலையில் உள்ள எடப்பள்ளி பகுதியில் பலத்த காற்று வீசியதில் இப்பகுதியில் இருந்த மரம் சாலையின் குறுக்கே விழுந்தது.
இதனால் அந்த வழியே போக்குவரத்து தடைபட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று மரத்தை அப்புறப்படுத்தினர். அதன்பின்னர் போக்குவரத்து சீரானது.