பேராசிரியையிடம் நகைப் பறிப்பு

கூடலூரை அடுத்துள்ள ஆமைக்குளம் பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை, பேராசிரியையின்

கூடலூரை அடுத்துள்ள ஆமைக்குளம் பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை, பேராசிரியையின் வீட்டுக் கதவை தட்டி, 2 பவுன் தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.
கூடலூரை அடுத்துள்ள ஆமைக்குளம் பகுதியில் உள்ள பாரதியார் பல்கலைக்கழக கலை அறிவியல் கல்லூரியில் ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியையாகப் பணிபுரிபவர் நிர்மலா. இவரது சொந்த ஊர் கொளப்பள்ளி. இவர், பணி நிமித்தமாக காரணமாக கல்லூரி அருகே வாடகை வீடு எடுத்து வசித்து வருகிறார். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணிக்கு நிர்மலாவின் வீட்டுக் கதவை தட்டும் சப்தம் கேட்டதால் அவர் கதவைத் திறந்து பார்த்தார். அப்போது, மர்ம நபர்கள் நிர்மலா கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் தேவாலா காவல் ஆய்வாளர் மணிவண்ணன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com