நீலகிரி மாவட்டத்தில் நடத்தப்பட்ட வாகனச் சோதனைகளில் சனிக்கிழமை ரூ.8.24 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
உதகை சட்டப்பேரவைத் தொகுதியில் ஒருவரிடமிருந்து ரூ.96,420, கூடலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 7 பேரிடமிருந்து ரூ.7 லட்சத்து 28,000 என மொத்தம் ரூ.8 லட்சத்து 24,420 ரொக்கம் கைப்பற்றப்பட்டது. இதையும் சேர்த்து சனிக்கிழமை இரவு வரை மாவட்டத்தில் மொத்தம் ரூ.1 கோடியே 92 லட்சத்து 6,320 ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட தொகைகளில் உதகை தொகுதியில் 5 பேருக்கு ரூ.7 லட்சத்து 71,510, கூடலூர் தொகுதியில் 18 பேருக்கு ரூ.30 லட்சத்து 69,450, குன்னூர் தொகுதியில் 3 பேருக்கு ரூ.3 லட்சத்து 35,000 என மொத்தம் ரூ. 41 லட்சத்து 75,960 ரொக்கம் உரிய ஆவணங்கள் காண்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து விடுவிக்கப்பட்டுள்ளது.