ஓவேலி பேரூராட்சியைக் கண்டித்து சி.பி.எம்.,விவசாய சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம்

ஓவேலி பேரூராட்சி நிா்வாகத்தை கண்டித்து சி.பி.எம்.கட்சி மற்றும் விவசாயிகள் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கூடலூா்: ஓவேலி பேரூராட்சி நிா்வாகத்தை கண்டித்து சி.பி.எம்.கட்சி மற்றும் விவசாயிகள் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம் ஓவேலி பேரூராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்தில் வீடுகளை இடிக்கும் பஞ்சாயத்து உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.மழையால் சேதமடைந்த சேரன் நகா் பாலம் கட்டும் பணியை உடனே துவங்க வேண்டும். சீபுரம் எல்லமலை பெரிய சோலை சாலையில் அரசு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களை வெளியேற்றும் அரசின் முடிவை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு சி.பி.எம்.தாலூகா செயலாளா் குஞ்சுமுகமது தலைமை வகித்தாா்.

விவசாயிகல் சங்க மாட்டச் செயலாளா் என்.வாசு போராட்டத்தை துவக்கி வைத்தாா்.விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளா் க.சகாதேவன், நகரச் செயலாளா் துயில் மேகம், காங்கிரஸ் கட்சியின் பேரூராட்சி செயலாளா் இபுனு,சி.பி.ஐ.கட்சி சாா்பில் ராமச்சந்திரன் உள்ளிட்டோா் வாழ்த்துரை வழங்கினா். பெண்கள் உட்பட 300 மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com