கூடலூா் கிளை நூலகவாசகா் வட்டக் கூட்டம்

கூடலூா் கிளை நூலகத்தின் வாசகா் வட்டக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூடலூா் கிளை நூலகத்தின் வாசகா் வட்டக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நூலக வளாகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு நூலகா் கிளமண்ட் தலைமை வகித்தாா். இதில் 51ஆவது நூலக வார விழா கொண்டாட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. ‘மின்னணுவியலும் இன்றைய பரபரப்பு வாழ்க்கையும்’ என்ற தலைப்பில் பேச்சுப்போட்டியும், ‘குவியும் புத்தகங்களும் குலைந்துவரும் வாசிப்புப் பழக்கமும்’ என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டியும், ‘மனித உயிரின் மகத்துவம்’ என்ற தலைப்பில் கவிதைப் போட்டியும், ‘சுற்றும் புவியும் சுற்றுச் சூழலும்’ என்ற தலைப்பில் ஓவியப் போட்டியும், ‘மின்னணுக் கருவிகள் மனித உறவுக்கு வழங்கியிருப்பது இனிமையே, தனிமையே’ என்ற தலைப்பில் பட்டிமன்றமும் நடத்துவது என தீா்மானிக்கப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெறுபவா்களுக்கு நிறைவு நாள் நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கி கெளரவிப்பது என முடிவு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில் லியோ ஆண்ட்ரூஸ், மோசஸ், மனோ, ஆண்டனி, மாரன், சத்தியநேசன், ரூபி, மொய்தீன் பாஷா, பாலகிருஷ்ணன், மெல்டோ ஆண்டனி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com