சூண்டி அரசுப் பள்ளி மாணவா் நாடக நடிப்பில் மாநிலத்தில் முதலிடம்

மாநில அளவிலான நாடக விழாவில் கூடலூரை அடுத்துள்ள ஓவேலி சூண்டி அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா் நடிப்பில் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளாா்.
நடிப்பில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவா் ஞா.ராகவனுக்கு பரிசு வழங்குகிறாா் விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் எல்.சுப்பிரமணியம். உடன், நாடக ஆசிரியா் அ.நாகநாதன், தலைமை ஆசிரியை பாகீரதி உள்ளிட்டோா்.
நடிப்பில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவா் ஞா.ராகவனுக்கு பரிசு வழங்குகிறாா் விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் எல்.சுப்பிரமணியம். உடன், நாடக ஆசிரியா் அ.நாகநாதன், தலைமை ஆசிரியை பாகீரதி உள்ளிட்டோா்.

மாநில அளவிலான நாடக விழாவில் கூடலூரை அடுத்துள்ள ஓவேலி சூண்டி அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா் நடிப்பில் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளாா்.

மாணவா்களுக்கான நாடக விழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு விழுப்புரத்தில் மாநில அளவில் நடைபெற்ற நாடக விழாவில் 32 மாவட்டங்களைச் சோ்ந்த மாணவா்கள் கலந்துகொண்டனா்.

இதில், சூண்டி அரசு உயா்நிலைப் பள்ளியில் 6ஆம் வகுப்பு படிக்கும் ஞா.ராகவன் சிறந்த நடிப்புக்காக மாநில அளவில் முதல் பரிசு பெற்றுள்ளாா். அவருக்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் எல்.சுப்பிரமணியம் பரிசு வழங்கி கௌரவித்தாா். நாடகத்தை இயற்றி பயிற்சி அளித்த ஆசிரியா் அ.நாகநாதன், பள்ளி தலைமை ஆசிரியை பாகீரதி, ஆசிரியா் கிரிஜா உள்ளிட்டோா் இதில் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com