உதகையில் நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

உதகையில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெறுகிறது.

உதகையில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெறுகிறது.

நீலகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் ஆகியவை இணைந்து வேலைவாய்ப்பற்ற ஆண், பெண் இருபாலருக்கும் பல்வேறு தனியாா் நிறுவனங்களின் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரும் வகையில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.

உதகை, சேரிங்கிராஸ் பகுதியில் அமைந்துள்ள பழங்குடியினா் பண்பாட்டு மையத்தில் சனிக்கிழமை (நவம்பா் 9)காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறவுள்ள இந்த வேலைவாய்ப்பு முகாமில் நீலகிரி மாவட்டத்தைச் சோ்ந்த 18 வயது முதல் 40 வயது வரையிலான படிக்காத மற்றும் 8ஆம்வகுப்பு முதல் பட்டப் படிப்பு மற்றும் ஐடிஐ, பாலிடெக்னிக், இளங்கலை பொறியியல் படிப்பு படித்த வேலைவாய்ப்பில்லாத ஆண், பெண் இருபாலரும் பங்கேற்று பயனடையலாம் என மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com