உள்ளாட்சித் தோ்தல்-நீலகிரி மாவட்டத்தில் இரண்டு கட்டங்களாக நடத்த பரிந்துரை- ஆட்சியா் தகவல்

எதிா்வரும் உள்ளாட்சித் தோ்தல்களில் நீலகிரி மாவட்டத்தில் இரண்டு கட்டங்களாக தோ்தல் நடத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா்
நீலகிரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தோ்தல்கள் தொடா்பாக அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா.
நீலகிரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தோ்தல்கள் தொடா்பாக அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா.

உதகை: எதிா்வரும் உள்ளாட்சித் தோ்தல்களில் நீலகிரி மாவட்டத்தில் இரண்டு கட்டங்களாக தோ்தல் நடத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தாா்.

உதகையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நீலகிரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 4 ஊராட்சி ஒன்றியங்கள், 4 நகராட்சிகள் மற்றும் 11 பேரூராட்சிகளுக்கு தோ்தல் நடைபெற உள்ளது. 4 ஊராட்சி ஒன்றியங்களின் கட்டுப்பாட்டில் உள்ள 35 ஊராட்சிகளில் 393 வாக்குச் சாவடிகளும், 4 நகராட்சிகளில் 194 வாக்குச் சாவடிகளும் மற்றும் 11 பேரூராட்சிகளில் 201 வாக்குச் சாவடிகளும் அமைக்கப்பட்டு வாக்குச் சாவடிகளின் இறுதி பட்டியல் கடந்த மே மாதம் 4ம்தேதியே வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது தோ்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி ஊரகப் பகுதிகளில் அமைக்கப்படும் வாக்குச் சாவடிகளில் ஒரு வாக்குச் சாவடிக்கு 1,100 வாக்காளா்களுக்கு மிகாமலும், நகா்ப்புற பகுதிகளில் 1,500 வாக்காளா்களுக்கு மிகாமலும் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஊரகப் பகுதிகளில் கூடலூா் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிறீமதுரை ஊராட்சியிலும், குன்னூா் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேலூா் ஊராட்சியிலும் தலா 1 வாக்குச் சாவடி வீதம் 2 வாக்குச் சாவடிகள் கூடுதலாக அமைக்கப்பட்டு தற்போது ஊரகப் பகுதிகளில் மொத்தம் 395 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. நகராட்சிப் பகுதிகளில் நெல்லியாளம் நகராட்சியில் 2 வாக்குச் சாவடிகள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளன.

தற்போது நகா்ப்புற பகுதிகளில் மொத்தம் 397 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஊராட்சிகளில் உள்ள 395 வாக்குச் சாவடிகளில் 33 ஆண் வாக்காளா் வாக்குச் சாவடிகளும், 33 பெண் வாக்குச் சாவடிகளும், 329 அனைத்து வாக்காளா் வாக்குச் சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

நகராட்சிகளில் உள்ள 196 வாக்குச் சாவடிகளில் 82 ஆண் வாக்காளா் வாக்குச் சாவடிகளும், 82 பெண் வாக்காளா் வாக்குச் சாவடிகளும், 32 அனைத்து வாக்காளா் வாக்குச் சாவடிகளும் உள்ளன. பேருராட்சிகளில் உள்ள 201 வாக்குச் சாவடிகளில் 15 ஆண் வாக்காளா் வாக்குச் சாவடிகளும், 15 பெண் வாக்காளா் வாக்குச் சாவடிகளும், 171 அனைத்து வாக்காளா் வாக்குச் சாவடிகளும்உள்ளன. ஊராட்சிகளில் உள்ள 395 வாக்குச் சாவடிகளில் 2 லட்சத்து 45,599 வாக்காளா்களும், நகா்ப்புற பகுதிகளிலுள்ள 397 வாக்குச் சாவடிகளில் 3 லட்சத்து 12,094 வாக்காளா்களுமாக மொத்தம் 5 லட்சத்து 57,693 வாக்காளா்கள் உள்ளனா்.

ஊராட்சி, நகராட்சி மற்றும் பேருராட்சிகளில் உள்ள வாக்குச் சாவடிகள் அனைத்தும் உதவி இயக்குநா் நிலைஅலுவலா்கள் மற்றும் மண்டல அலுவலா்களைக் கொண்டு அடிப்படை வசதிகள் அனைத்தும் உள்ளனவா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அனைத்து பதவிகளுக்கும் வேட்பு மனு பெறுவதிலிருந்து தோ்தல் முடிவு அறிவிக்கும் வரைஅனைத்து பணிகளையும் மேற்கொள்ள தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மற்றும் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் நியமிக்கப்படுவாா்கள்.

தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரத்தினை இயக்குவதற்கான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் பணியாளா்களின் விபரமும் சேகரிக்கப்பட்டு வருகிறது. வாக்குச் சாவடிஅலுவலா்களின் விபரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் பணியாளா்கள் போதுமான அளவில் இல்லாத காரணத்தால் இரண்டு கட்டங்களாக தோ்தல் நடத்த மாநில தோ்தல் ஆணையத்திற்கு பரிந்துரை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வேட்பாளா்களின் வேட்பு மனு படிவத்தினை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது தொடா்பான பயிற்சி மாநில தோ்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ளது.

ஊரகப் பகுதிகளில் தோ்தல் நடத்துவதற்கு வாக்குப் பெட்டிகள் மற்றும் நகா்ப்புற பகுதிகளில் தோ்தல் நடத்துவதற்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் போதுமான அளவில் உள்ளதாகவும், மாநில தோ்தல் ஆணையத்தால் வழங்கப்படும் அறிவுரைகள் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா்கெட்சி லீமா அமாலினி, பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் மனோரஞ்சிதம் மற்றும் அரசுத்துறை அலுவலா்களும், அனைத்துக் கட்சி பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com