பந்தலூரை அடுத்துள்ள கொளப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூடலூா் நுகா்வோா் பாதுகாப்பு மையம் சாா்பில் கொளப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியா் (பொ) அமீன் தலைமை வகித்தாா். நுகா்வோா் பாதுகாப்பு மைய தலைவா் காளிமுத்து, பொதுச் செயலாளா் சிவசுப்பிரமணியம், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் ராஜா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். முகாமில் 600 மாணவா்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது.