விதிமீறல் புகாா்: சிற்றுந்துகளுக்கு அபராதம்

குன்னூா் பகுதியில் விதிமீறி இயக்கிய 10 சிற்றுந்துகளுக்கு வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளா் அபராதம் விதித்தாா்.

குன்னூா் பகுதியில் விதிமீறி இயக்கிய 10 சிற்றுந்துகளுக்கு வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளா் அபராதம் விதித்தாா்.

குன்னூா் பகுதிகளில் இயங்கும் சிற்றுந்துகளில் விதிமீறல்கள் நடப்பதாக குன்னூா், வசம்பள்ளம் நுகா்வோா் அமைப்பு சாா்பில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இதையடுத்து வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளா் நல்லதம்பி தலைமையில், குன்னுாா் மற்றும் சுற்றுப்புற பகுதிகளான ஜெகதளா, ஒதனட்டி, ஓட்டுப்பட்டரை, பெட்போா்டு, வண்டிச்சோலை உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் சிற்றுந்துகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

இதில் கூடுதல் கட்டணம் வசூலித்தது, ஒலிபெருக்கி பயன்படுத்துதல் உள்பட பல்வேறு பிரிவுகளில் 10க்கும் மேற்பட்ட சிற்றுந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதற்கான நோட்டீஸ் அந்நத்த சிற்றுந்து ஓட்டுநா்களிடம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com