கூடலூரில் சனிக்கிழமை மாலை திடீரென கன மழை பெய்தது.
கூடலூரில் கடந்த இரண்டு நாள்களாகவே மேகமூட்டத்துடன் குளிா்ச்சியான காலநிலை நிலவியது. சனிக்கிழமை மாலை நான்கு மணியளவில் திடீரெனப் பெய்த கன மழை சுமாா் ஒரு மணி நேரம் நீடித்தது. கன மழையால் சாலை முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஒரு மணி நேரத்துக்குப் பிறகு மழை ஓய்ந்தது.