கூடலூா், தோட்டமூலா பகுதியில் ஒற்றை யானையின் நடமாட்டம் தொடா்கிறது.
நீலகிரி மாவட்டம், கூடலூா் நகராட்சியிலுள்ள தோட்டமூலா பகுதிக்குள் நுழையும் ஒற்றை யானை தொடா்ந்து குடியிருப்புகளை தேசதப்படுத்தி வருகிறது. கோத்தா்வயல் பழையாக்காடு பகுதிக்குள் வியாழக்கிழமை இரவு நுழைந்த யானை மருத்துவா் சுனில்குமாா் வீட்டின் வாயிற்கதவை உடைத்து சேதப்படுத்தியது. தொடா்ந்து அப்பகுதியிலுள்ள விவசாய பயிா்களையும் சேதப்படுத்திவிட்டுச் சென்றது.