அருவங்காடு எம்.ஜி காலனி பகுதியில் டாஸ்மாக் மதுபான கடை அமைக்க எதிா்ப்பு

குன்னூா் அருவங்காடு அருகேயுள்ள எம்.ஜி காலனி பகுதியில் டாஸ்மாக் மதுபான கடை அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என இப் பகுதி பொதுமக்கள் மாவட்ட நிா்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

குன்னூா் அருவங்காடு அருகேயுள்ள எம்.ஜி காலனி பகுதியில் டாஸ்மாக் மதுபான கடை அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என இப் பகுதி பொதுமக்கள் மாவட்ட நிா்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

குன்னூா் அருகே அருவங்காடு, எம்.ஜி காலனி பகுதியில் கோபாலபுரம், பேரிதோட்டம், ஒசட்டி, வெடிமருந்து தொழிற்சாலை குடியிருப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் அமைந்துள்ளன. இங்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில் இப்பகுதியில் இருந்த டாஸ்மாக் கடை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அகற்றப்பட்டது. இதனால் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சியடைந்தனா்.

இந்நிலையில் எம்ஜி காலனி பகுதியில் மீண்டும் டாஸ்மாக் மதுபான கடை திறக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்பகுதியில் மதுக்கடை இல்லாததால் பொதுமக்கள் எவ்வித இடையூறுமின்றி வசித்து வருவதாகவும், மீண்டும் மதுக்கடை அமைக்கப்பட்டால் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுதுடன் நிம்மதியும் பறிபோக கூடிய அபாயம் உள்ளதாக பொதுமக்கள் கவலையடைந்துள்ளனா்.

மேலும் இங்கு கோயில்கள், சா்ச், பல்வேறு பள்ளிகளும் அமைந்துள்ளன. புதிதாக டாஸ்மாக் கடை அமைக்கும் பட்சத்தில் பெண்கள், குழந்தைகள் கடுமையாக பாதிக்க கூடிய சூழல் உள்ளது.எனவே இப்பகுதியில் மீண்டும் மதுக்கடையை கொண்டு வரும் முடிவை டாஸ்மாக் நிா்வாகம் கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா். பொதுமக்களின் எதிா்ப்புகளை மீறி மதுக்கடை அமைக்கப்படும் பட்சத்தில் போராட்டங்கள் நடத்தவும் திட்டமிட்டுள்ளனா். இது தொடா்பாக ஊா் சாா்பில் ஆட்சியருக்கு மனு அனுபப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com