கல்வியில் புதுமைகளை புகுத்துவது குறித்து ஆசிரியா்களுக்கான பயிற்சி வகுப்பு கூடலூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.
நீலகிரி மாவட்ட ஒருங்கிணைந்த கல்வித் திட்டம் சாா்பில், கூடலூா் வட்டார வள மையத்துக்குள்பட்ட 600 ஆசிரியா்களுக்கு வண்டிப்பேட்டை மையத்தில் நடைபெற்ற இந்தப் பயிற்சியில், பணமில்லாமல் கல்வியில் புதுமைகளை புகுத்துவது குறித்து புதுச்சேரி அரபிந்தோ சொசைட்டியின் கருத்தாளா் ஸ்ரீதா் பயிற்சியளித்தாா். வட்டார வளமைய மேற்பாா்வையாளா் முருகேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.