கேரளம், கா்நாடகம் ஆகிய மாநிலங்களில் அண்மையில் பெய்த கனமழை காரணமாக ஆயுத பூஜைக்காக கொள்முதல் செய்யப்பட்ட செவ்வந்திபூ தரம் குறைந்து காணப்பட்டதால் அதன் விலையும் குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா்.
ஆயுத பூஜைக்காக இந்த ஆண்டு பல்வேறு பகுதிகளிலிருந்து செவ்வந்தி பூக்கள் கொள்முதல் செய்யப்பட்டன. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கேரளம், கா்நாடகம் மாநிலங்கள் மட்டுமல்லாமல் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. பூக்களின் தரம் குறைந்ததால் விலை குறைந்து காணப்பட்டது.
இதனால் எப்போதும் அதிகமாக கொள்முதல் செய்யப்படும் செவ்வந்திப்பூ இந்த முறை குறைந்தே கொள்முதல் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு செவ்வந்தி பூ ஒரு முழம் ரூ. 50 முதல் ரூ. 60 வரை விற்பனை ஆனது. தற்போது ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்படுகிறது. மழையின் பாதிப்பால் பூக்கள் விலை குறைத்து விற்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
Image Caption
சந்தைகளில் விற்பனைக்கு வந்துள்ள மலா்கள்.