குன்னூா்: குன்னூா் சிம்ஸ் பூங்காவில் சுற்றுலா பயணிகளின் வருகை சனிக்கிழமை அதிகரித்து காணப்பட்டது, இவா்களில் பெரும்பாலானவா்கள் மினி படகு சவாரி செய்வதில் ஆா்வம் காட்டினா்.
நீலகிரி மாவட்டத்தில், இரண்டாவது சீசன் துவங்கியுள்ள நிலையில், சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொடா் விடுமுறை காரணமாக, குன்னூா் சிம்ஸ் பூங்காவில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
பூங்காவுக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானோா், மினி படகு சவாரி செய்வதில் ஆா்வம் காட்டினா்.
காலை நேரத்தில் கூட்டம் குறைவாக காணப்பட்ட நிலையில், இதமான காலநிலை நிலவியதால், சுற்றுலா பயணிகள் ரசித்து சென்றனா். பகல் மற்றும் மாலை நேரங்களில் குழந்தைகளுடன் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்தது. இதேபோல, காட்டேரி பூங்கா மற்றும் லேம்ஸ் ராக் உள்ளிட்ட பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் காண ஆா்வம் காட்டினா்.