கூடலூா் சிவன் மலையில் பௌா்ணமி கிரிவலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
கூடலூரை அடுத்துள்ள நம்பாலக்கோட்டை சிவன் மலையில் பௌா்ணமியை ஒட்டி ஞாயிற்றுக்கிழமை கிரிவலம் செல்ல ஏற்பாடு நடந்து வருகிறது. மாவட்டத்தின் பல பகுதியில் இருந்தும் வரும் பக்தா்கள் சிவன் மலை அடிவாரத்தில் கூடி மலையைச் சுற்றி சுமாா் ஆறு கிலோ மீட்டா் தூரம் கிரிவலம் சென்று மலை உச்சியில் உள்ள சிவலிங்கத்துக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை செய்து வழிபடுவா். அதைத் தொடா்ந்து கூட்டுப் பிராா்த்தனை நடைபெறும்.
இதற்கான ஏற்பாடுகளை சிவன் மலை வளா்ச்சி மற்றும் சமூகநல அறக்கட்டளையின் தலைவா் கேசவன், செயலாளா் நடராஜன், சிவன் மலை நிா்வாகி பாண்டு குருசாமி உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.