உதகை ஏரியில்  தாய், மகள் தற்கொலை

உதகையில் படகு இல்லம் அமைந்துள்ள ஏரியில்  குதித்து தாய், மகள் ஆகியோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 

உதகையில் படகு இல்லம் அமைந்துள்ள ஏரியில்  குதித்து தாய், மகள் ஆகியோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 
உதகை அருகே நொண்டிமேடு பகுதியில் வசிப்பவர் நிர்மலா (35).  இவரது  மகள் ஹரிதா (4).  லவ்டேல் பகுதியிலுள்ள ஒரு  தனியார் பள்ளியில் யூகேஜி படித்து வந்தார். இந்நிலையில் தாய், மகள்  இருவரையும் செவ்வாய்க்கிழமை மாலையிலிருந்து  காணவில்லை என அவர்களது உறவினர்கள் உதகை நகர மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.  இந்நிலையில், ஓணம் பண்டிகையையொட்டி உதகை படகு இல்லத்தில் சுற்றுலாப் பயணிகள் குவிந்திருந்ததால் அதிக அளவிலான படகுகள்  இயக்கப்பட்டன.  
அப்போது  ஏரியில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மேற்கு கரை பகுதியில்  இரு உடல்கள் மிதப்பதைக் கண்டு படகு இல்ல நிர்வாகத்துக்கு தெரிவித்த தகவலையடுத்து உதகை நகர மேற்கு  காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் துறையினர் இரண்டு  உடல்களையும் கைப்பற்றி உதகை அரசு தலைமை மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். 
தொடர்ந்து  நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் இருவரும் நொண்டிமேடு பகுதியிலிருந்து காணாமல் போனவர்கள் என்ற விவரம் தெரியவந்தது.  அதன் பின்னர் புகார் கொடுத்திருந்த அவர்களது உறவினர்கள் வரவழைக்கப்பட்டு உறுதி செய்தனர்.  
இறந்த நிர்மலாவின் கணவர்  கதிரவன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில்,  கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அவர்களது திருமண தினம் வந்துள்ளது. அதிலிருந்தே  மிகுந்த மன உளைச்சலோடு காணப்பட்ட  நிர்மலா, தனது மகளுடன் உதகை படகு இல்ல ஏரியில் செவ்வாய்க்கிழமை குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் காவல் துறையினர் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com