கூடலூரில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை கண்டித்து அரசியல் கட்சியினர் திங்கள்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பி.எஸ்.என்.எல். நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு முறையான சேவையை வழங்காமல் அலைக்கழிப்பதால் சந்தாதாரர்கள் அவசர தேவைகளுக்கு யாரையும் தொடர்புகொள்ள முடிவதில்லை. வாரத்தில் பெரும்பாலான நாள்கள் தொலைத் தொடர்பு சேவை துண்டிக்கப்படுகிறது. இன்டர்நெட் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் துண்டிக்கப்படுவதால் வாடிக்கையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதை முறைப்படுத்த வலியுறுத்தி காந்தி திடலில் அரசியல் கட்சியினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். கூடலூர் எம்எல்ஏ திராவிடமணி, எம்.பாண்டியராஜ், விசிக சார்பில் சகாதேவன், காங்கிரஸ் கட்சி சார்பில் அம்சா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.