உதகையில் மின் நுகர்வோர் பெயர் மாற்றும் சிறப்பு முகாம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக நீலகிரி வட்ட மேற்பார்வை பொறியாளர் வாசுநாயர் பிரேம்குமார் தலைமையில் உதகை மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள உதவி செயற் பொறியாளர் அலுவலகத்தில் மின்நுகர்வோர் சிறப்பு பெயர் மாற்றும் முகாம் வரும் 30ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நிர்வாக காரணங்களால் இம்முகாம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. முகாம் மீண்டும் நடைபெறும் நாள், இடம் பின்னர் அறிவிக்கப்படும் என உதகை மின்பகிர்மான அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.