மாதா அமிர்தானந்தமயி பிறந்த நாள் விழா கூடலூரில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
நீலகிரி மாவட்டம், கூடலூர் தேவர்சோலை சாலையில் உள்ள விநாயகர் கோயிலில் அமிர்தா சேவை மையம், ஸ்ரீ சத்ய சாய் சேவா சமிதி, ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி, நம்பாலக்கோட்டை கிரிவலக் குழு, புரட்டாசி பஜனைக் குழு, ஸ்ரீநாராயண சேவா கூட்டு வழிபாட்டு மன்றம் ஆகிய அமைப்புகள் சார்பில் மாதா அமிர்தானந்தமயி பிறந்த நாளை ஒட்டி கூட்டு வழிபாடு, பஜனை ஊர்வலம் நடைபெற்றது.
கிரிவலக் குழுச் செயலாளர் நடராஜன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.