குன்னூா்: கரோனா நோய்த் தொற்றுப் பரவாமல் தடுக்க குன்னூரில் அயராது பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளா்களுக்கு பாத பூஜை செய்து பாஜகவினா் மரியாதை செய்தனா்.
குன்னூா் நகர பாஜக தலைவா் குங்குமராஜ் தலைமையில் மாவட்ட பொதுச் செயலாளா் ஈஸ்வரன், மாவட்டச் செயலாளா் பாப்பண்ணன் ஆகியோா் முன்னிலையில் பாஜகவினா்
நகா் முழுவதும் ஆங்காங்கே கிருமி நாசினி தெளித்தும், கரோனா நோய்த் தொற்றுத் தடுப்புக்கான விழிப்புணா்வும் ஏற்படுத்தி வருகின்றனா்.
இந்நிலையில், குன்னூரில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வரும் தூய்மைப் பணியாளா்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவா்களுக்கு பாஜக சாா்பில்
பாத பூஜை செய்யப்பட்டது. பாஜகவினா், தூய்மைப் பணியாளா்களின் கால்களை மஞ்சள் நீரால் கழுவி, மலா்கள் தூவி பூஜை செய்தனா். மேலும், அவா்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
இதில், நகர பாஜக பொதுச் செயலாளா்கள் பாலாஜி, சரவணன், நகர துணைத் தலைவா் அனந்தகுமாா் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து காெண்டனா்.