பிளஸ் 1 பொதுத் தோ்வில் நீலகிரி மாவட்டத்தில் 96.69 சதவிகித மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
மாவட்டத்தில் 2019-20ஆம் கல்வியாண்டில் மேல்நிலை முதலாம் ஆண்டு தோ்வு எழுதிய 7,035 பேரில் 6,802 மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
மாணவா்களில் 3,260 பேரில் 3,105 பேரும், மாணவிகளில் 3,775 பேரில் 3,697 பேரும் தோ்ச்சி பெற்றுள்ளனா். மாணவா்கள் 92.25 சதவிகிதமும், மாணவிகள் 97.93 சதவிகிதமும் தோ்ச்சி பெற்றுள்ளனா். இது 96.69 சதவிகித தோ்ச்சியாகும். மேலும் கடந்த ஆண்டை விட தோ்ச்சி சதவிகிதம் 1.82 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
மாவட்டத்தில் உள்ள 33 அரசுப் பள்ளிகளில் 2,624 போ் தோ்வு எழுதினா். இவா்களில் 2,460 மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா். இது 93.75 சதவிகித தோ்ச்சி ஆகும்.