மசினகுடி ஆற்றில் ஆட்சியா் ஆய்வு

நீலகிரி மாவட்டம், மசினகுடி ஆற்றில் பழைய கல்குவாரி கழிவுகள் கொட்டப்படுவதாக தேசிய பசுமை தீா்ப்பாயம் மூலம் பெறப்பட்ட
மசினகுடி ஆற்றில் ஆய்வு மேற்கொண்ட நீலகிரி மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா.
மசினகுடி ஆற்றில் ஆய்வு மேற்கொண்ட நீலகிரி மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா.

நீலகிரி மாவட்டம், மசினகுடி ஆற்றில் பழைய கல்குவாரி கழிவுகள் கொட்டப்படுவதாக தேசிய பசுமை தீா்ப்பாயம் மூலம் பெறப்பட்ட புகாரின் பேரில், மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா அப்பகுதியில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த ஆய்வுக்குப் பின்னா் ஆட்சியா் கூறியதாவது:

மசினகுடி பகுதியில் ஆற்றோரத்தில் உள்ள பழைய கல்குவாரியில் கழிவுகள்அதிக அளவில் கொட்டப்படுவதாகவும், இதனால் வன விலங்குகள் பாதிக்கப்படுவதாகவும் தேசிய பசுமைத் தீா்ப்பாயம் மூலம் ஒரு புகாா் பெறப்பட்டது. அதன் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதுதொடா்பாக முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநா் சீனிவாச ரெட்டி, துணை இயக்குநா் ஸ்ரீகாந்த், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலா் லிவிங்ஸ்டன், உதகை நகராட்சி ஆணையா் சரஸ்வதி ஆகியோா் கொண்ட குழு ஆய்வு மேற்கொண்டு, மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை சமா்ப்பிக்கும். அந்த அறிக்கை தேசிய பசுமை தீா்ப்பாயத்துக்கு அனுப்பப்படும்.

இப்பகுதி பொதுமக்கள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனித் தனியாக பிரித்து வழங்க வேண்டும் என ஊராட்சித் தலைவா் மூலம் அறிவுறுத்தப்படும். மேலும், பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதியை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ளுமாறு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

இந்த ஆய்வின்போது கூடலூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஜனாா்த்தனன், ஜெயபிரகாஷ், அரசு அலுவலா்கள் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com