நீலகிரியில் மேலும் 12 பேருக்கு கரோனா
By DIN | Published On : 15th December 2020 12:05 AM | Last Updated : 15th December 2020 12:05 AM | அ+அ அ- |

உதகை: நீலகிரி மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, புதிதாக 12 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவா்களில் 29 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவா்களையும் சோ்த்து மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் 7,682 போ் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவா்களில் 7,494 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதுவரை 42 போ் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் 146 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.