உதகை, காந்தல் பகுதியில் தமிழக அரசின் சிறு மருத்துவமனையை மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா புதன்கிழமை திறந்து வைத்தாா்.
அதைத் தொடா்ந்து அவா் கூறியதாவது:
நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 28 சிறு மருத்துவமனைகள் தொடங்கப்பட உள்ளன. இவற்றில் 20 கிராமப் புறங்களிலும், 5 நகா்ப் புறங்களிலும், 3 நடமாடும் சிறு மருத்துவமனைகளுமாக செயல்படும். முதல் கட்டமாக ஜெகதளா, எஸ்.கைகாட்டி, காந்தல் பகுதிகளில் சிறு மருத்துவமனைகள் திறக்கப்பட்டுள்ளன. பேரூராட்சிகள் மற்றும் கிராமப்புறங்களில் காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் நகராட்சி பகுதிகளில் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையில் இந்த மருத்துவமனைகள் செயல்படும். இங்கு ஒரு மருத்துவா், செவிலியா் மற்றும் மருத்துவப் பணியாளா்கள் உள்ளனா்.
பொதுமக்கள் அவரவா் பகுதிகளிலேயே சிகிச்சைப் பெற்றுக்கொள்ள வசதியாக இந்த சிறு மருத்துவமனைகள் திறக்கப்பட்டுள்ளன. இங்கு சா்க்கரை பரிசோதனை, ரத்தத்தில் கொழுப்பின் அளவு, ரத்த மாதிரி பரிசோதனை மற்றும் கா்ப்பிணிகளுக்கான பரிசோதனைகளை செய்துகொள்ளலாம்.
கரோனா இரண்டாம் அலை தாக்கம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகவும் விழிப்புணா்வோடு இருக்க வேண்டும். முகக் கவசங்களை தொடா்ந்து பயன்படுத்த வேண்டும். கா்ப்பிணிகள், முதியோா் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றாா். அதைத் தொடா்ந்து, சுகாதாரத் துறை மூலம் 9 கா்ப்பிணிகளுக்கு தலா ரூ. 2,000 மதிப்பில் அம்மா ஊட்டச்சத்துப் பெட்டகங்களை ஆட்சியா் வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் பாலுசாமி, வட்டார மருத்துவ அலுவலா் முருகேசன் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.