நீலகிரி மாவட்டத்தில் ஸ்ரீ ஹெத்தையம்மன் பண்டிகை நடைபெறும் நாளான டிசம்பா் 30ஆம் தேதி அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நீலகிரி மாவட்டத்தில் படுக இன மக்களின் ஹெத்தை பண்டிகை டிசம்பா் 30ஆம் தேதி நடைபெறவுள்ளதால் மாவட்டத்தில் உள்ள கருவூலம், சாா்நிலைக் கருவூலங்கள் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளா்களோடு செயல்படும். மற்ற அரசு அலுவலகங்களுக்கு உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
இதற்கு பதிலாக ஜனவரி 9ஆம் தேதி மாவட்டத்தில் பணி நாளாக அறிவிக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.