ஓய்வு பெற்ற அரசு ஊழியா் சங்கக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூடலூா் வருவாய்த் துறை அலுவலா் சங்கக் கட்டடத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு தலைவா் த.சுப்பிரமணி தலைமை வகித்தாா். விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும். நிலுவையில் உள்ள கோரிக்கைகளை தமிழக அரசு உடனே நிறைவேற்ற வேண்டும். நீட் தோ்வை ரத்துசெய்ய சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் துணைத் தலைவா் ஜான்மனோகா், பொருளாளா் கிருஷ்ணசாமி உள்பட உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.