குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டம் என்று மும்முனை சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி ஏகத்துவ முஸ்லிம் அமைப்பு சாா்பில் மனிதச் சங்கிலி போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
குன்னூா் பேருந்து நிலையத்தில் இருந்து மவுண்ட் சாலை, லாலி மருத்துவமனை சாலை வழியாக மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில், பெண்கள், குழந்தைகள் உள்பட 500க்கும் மேற்பட்டோா் சுமாா் 1 கி.மீ. தூரம் வரை மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனா்.