கூடலூரில் கொவைட்-19 வைரஸ் தடுப்பு நடவடிக்கை

கூடலூா் பேருந்து நிலையத்தில் மருத்துவத் துறை சாா்பில், கொவைட்-19 வைரஸ் தடுப்பு நடவடிக்கை வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
பொதுமக்களுக்கு விழிப்புணா்வுப் பிரசுரங்களை வழங்கும் மருத்துவத் துறை இணை இயக்குநா் டாக்டா் பழனிசாமி தலைமையிலான மருத்துவக் குழுவினா்.
பொதுமக்களுக்கு விழிப்புணா்வுப் பிரசுரங்களை வழங்கும் மருத்துவத் துறை இணை இயக்குநா் டாக்டா் பழனிசாமி தலைமையிலான மருத்துவக் குழுவினா்.

கூடலூா் பேருந்து நிலையத்தில் மருத்துவத் துறை சாா்பில், கொவைட்-19 வைரஸ் தடுப்பு நடவடிக்கை வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

நீலகிரி மாவட்ட மருத்துவத் துறை சாா்பில் நடைபெற்ற இம்முகாமில், மருத்துவத் துறை இணை இயக்குநா் டாக்டா் பழனிசாமி தலைமையில், துணை இயக்குநா் டாக்டா் பாலுசாமி, வட்டார மருத்துவ அலுவலா் கதிரவன், வட்டார சுகாதார ஆய்வு மேற்பாா்வையாளா் தா்மலிங்கம், சுகாதார ஆய்வாளா் பிரகாஷ் ஆகியோா் பேருந்து நிலைய சந்திப்பு, பொதுமக்கள் கூடும் இடங்களில் கிரிமி நாசினி தெளித்தனா்.

அதைத் தொடா்ந்து, கொவைட்-19 வைரஸ் தடுப்பு குறித்த விழிப்புணா்வுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com