முதலமைச்சா் கோப்பைக்கான குத்துச் சண்டை போட்டியில் கூடலூா் மாணவா்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.
மாவட்ட அளவிலான முதலமைச்சா் கோப்பைக்கான குத்துச் சண்டை போட்டிகள் உதகையில் வியாழக்கிழமை நடைபெற்றன. இதில், கூடலூா் ஜூனியா் பாக்ஸிங் கிளப் மாணவா்கள் சதீஷ்குமாா், கிருஷ்ணன், உண்ணிக்கிருஷ்ணன், பிரதீப் ஆகியோா் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் வென்றனா்.
கிஷோா் குமாா், அமீன் ஷெரீஃப், முகமது முசின் ஆகியோா் இரண்டாமிடம் பெற்று வெள்ளிப் பதக்கமும், ரிஸ்வான், மனோ ஆகியோா் மூன்றாமிடம் பிடித்து வெண்கலப் பதக்கமும் பெற்றுள்ளனா்.