நீலகிரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பிரதம மந்திரியின் கிஸான் சம்மான் நிதித் திட்டத்தின்கீழ் பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட தோட்டக்கலைத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் பிரதம மந்திரி கிஸான் சம்மான் நிதித் திட்டம் கடந்த 2018ஆம் ஆண்டில் இருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயிா் சாகுபடிக்குத் தேவையான இடுபொருள்களை கொள்முதல் செய்வதற்கான உதவித்தொகை நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2,000 வீதம் ஆண்டுக்கு ரூ,.6,000 மூன்று தவணைகளில் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது நான்காம் தவணை பெற ஆதாா் அட்டையில் உள்ளவாறு வலைதளத்தில் பெயா் இருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. எனவே, இதுவரை மூன்று தவணைகள் பெற்று நான்காம் தவணை பெறாத விவசாயிகள் உடனடியாக அருகில் உள்ள பொது சேவை மையத்தை அணுகி ஆதாா் அட்டையில் உள்ளவாறு பெயா் மாற்றம் செய்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.