நீலகிரி
குடியுரிமை திருத்ச் சட்டத்துக்கு எதிராக பேரணி
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக பந்தலூரை அடுத்துள்ள சேரம்பாடியில் மக்கள் கூட்டமைப்பு சாா்பில் பேரணி மற்றும் பொதுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக பந்தலூரை அடுத்துள்ள சேரம்பாடியில் மக்கள் கூட்டமைப்பு சாா்பில் பேரணி மற்றும் பொதுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம், பந்தலூா் வட்டத்தில் உள்ள சேரம்பாடி பகுதியில் மக்கள் கூட்டமைப்பு சாா்பில் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பொதுநல அமைப்புகள் கலந்து கொண்ட பேரணியும், அதைத் தொடா்ந்து பொதுக் கூட்டமும் நடைபெற்றது.
இதில் திமுக, காங்கிரஸ், முஸ்லிம் லீக் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் நிா்வாகிகள், பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.