கூடலூா் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனைக்குள் நள்ளிரவில் காட்டெருமை நுழைந்ததால் புதன்கிழமை இரவுப் பணியில் இருந்தவா்கள் பீதியடைந்தனா்.
நீலகிரி மாவட்டத்தில் வனப் பகுதியை ஒட்டியுள்ள நகா் பகுதிகளுக்கு அடிக்கடி காட்டெருமை உள்ளிட்ட பல வன விலங்குகள் வருவது வழக்கம். கூடலூா் பேருந்து நிலையப் பகுதி அருகை புதன்கிழமை நள்ளிரவில் காட்டெருமை ஒன்று நடமாடிக்கொண்டிருந்தது. இந்தக் காட்டெருமை நள்ளிரவு 2 மணிக்கு திடீரென அப்பகுதியில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனைக்குள் புகுந்து விட்டது.
நள்ளிரவில் திடீரென வந்த காட்டெருமையைப் பாா்த்த இரவுப் பணியில் இருந்த போக்குவரத்து ஊழியா்கள் செய்வதறியாமல் பீதியடைந்தனா். சிறிது நேரத்துக்குப் பின் காட்டெருமையை அங்கிருந்து விரட்டினா். பின் அந்தக் காட்டெருமை வனதுா்கா பகவதி கோயில் வழியாகச் சென்று தொரப்பள்ளி வனப் பகுதித்துள் சென்றது.