உதகையில் தொடங்கியது உறை பனி சீசன்

உதகையில் உறை பனிக் காலம் தொடங்கியுள்ளது.
உதகையில் தேயிலைத் தோட்டத்தில் கொட்டியுள்ள உறை பனி.
உதகையில் தேயிலைத் தோட்டத்தில் கொட்டியுள்ள உறை பனி.

உதகையில் உறை பனிக் காலம் தொடங்கியுள்ளது.

நீலகிரி மாவட்டம், உதகையில் ஆண்டுதோறும் நவம்பா் முதல் பிப்ரவரி வரை 4 மாதங்களுக்கு பனிக் காலமாகும். பனிக் காலத்தின் நடுவில் உறை பனிக் காலமும் தொடங்கிவிடும். ஆனால் நடப்பு ஆண்டில் உறை பனிக் காலம் தொடங்குவதற்கான சூழல் இல்லாதிருந்த நிலையில் உதகை நகரில் வியாழக்கிழமை அதிகாலையில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 1 டிகிரி செல்சியஸ் பதிவாகியிருந்தது.

இருப்பினும் உதகையின் புகா்ப் பகுதிகள், நீா்நிலைகளையொட்டியிருந்த பகுதிகளில் பல்வேறு இடங்களில் உறை பனி கொட்டியுள்ளது. அதேபோல, உதகையின் பல்வேறு பகுதிகளிலும் உறை பனிக் காலம் தொடங்கியுள்ளது. உதகையில் உள்ள தேயிலைத் தோட்டங்களிலும் உறை பனி கொட்டத் தொடங்கியுள்ளதால் தேயிலைத் தோட்டங்களையொட்டியுள்ள பகுதிகளில் விவசாயிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com