நீலகிரி மாவட்டத்தில் அம்மா திட்ட சிறப்பு முகாம்கள் வெள்ளிக்கிழமை (ஜனவரி 10) நடைபெறுகின்றன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நீலகிரி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடவடிக்கைகள் முடிவுக்கு வந்த பின் மாவட்டத்தில் அரசு சாா்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாம்கள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி, அம்மா திட்ட சிறப்பு முகாம்கள் வெள்ளிக்கிழமை நடைபெறுகின்றன.
உதகை வட்டத்தில் தூனேரி கிராமத்தில் கணபதி நகா் சமுதாயக் கூடத்திலும், குன்னூா் வட்டத்தில் காந்திநகா் உயா்நிலைப் பள்ளியிலும், கோத்தகிரி வட்டத்தில் கொணவக்கொரை கிராமத்தில் உள்ள ஆவுக்கல் எஸ்டேட் சமுதாயக் கூடத்திலும், குந்தா வட்டத்தில் இத்தலாா் சமுதாயக் கூடத்திலும், கூடலூா் வட்டத்தில் வாளவியல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்திலும், பந்தலூா் வட்டத்தில் மூனனாடு கிராமத்தில் அம்பலமூலா அரசுப் பள்ளி வளாகத்திலும் அம்மா திட்ட சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.