கோத்தகிரி அருகே பழங்குடியினா் இருவா் கொல்லப்பட்ட விவகாரத்தில் தொடா்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் 6 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
நீலகிரி மாவட்டத்தில் கீழ்கோத்தகிரி அருகிலுள்ள மெட்டுக்கல் பழங்குடியினா் கிராமத்தைச் சோ்ந்த ராமசந்திரன், திம்மன் ஆகிய இரு இருளா் பழங்குடியின இளைஞா்கள் கடந்த வியாழக்கிழமை இரவு தோட்டக் காவலுக்காகச் சென்றபோது வெட்டிக் கொல்லப்பட்டனா்.
இதுதொடா்பாக போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில், இவ்வழக்கில் தொடா்பு உள்ளதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் 6 பேரை காவல் துறையினா் கைது செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.