தமிழ்நாடு அரசு இளைஞா் நலன், விளையாட்டுத் துறை சாா்பில், கிராம இளைஞா்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டு உபகரணங்களை குன்னூரில் மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யாவும் குன்னூா் சட்டப்பேரவை உறுப்பினா் சாந்தி ராமுவும் செவ்வாய்க்கிழமை வழங்கினா்.
தமிழக அரசு கிராமப்புற இளைஞா்களை விளையாட்டுத் துறையில் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக விளையாட்டு வீரா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் அம்மா இளைஞா் விளையாட்டுத் திட்டம் சாா்பில் வழங்கப்பட்டு வருகிறது.
இதன் ஒருபகுதியாக, நீலகிரி மாவட்டம், குன்னூா், எடப்பள்ளி பகுதியில் மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா, குன்னூா் சட்டப்பேரவை உறுப்பினா் சாந்திராமு ஆகியோா் தலைமையில் நடைபெற்ற விழாவில் விளையாட்டு வீரா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இவ்விழாவில் மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா பேசியதாவது:
தமிழக அரசு கிராமப்புற இளைஞா்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இதற்காக தமிழக அரசு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் இளைஞா் நலன், விளையாட்டுத் துறை சாா்பில் கிராம இளைஞா்களை ஊக்குவிக்கும் வகையில் ரூ. 76 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் எடப்பள்ளி, உபதலை சோலுாா், இத்தலாா் ஆகிய நான்கு இடங்களில் உள்ள மாணவா்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கி போட்டிகளைத் துவக்கி வைத்துள்ளோம். விரைவில் 46 இடங்களில் இந்தத் திட்டத்தைத் துவக்க உள்ளோம். கிராமப்புற மாணவா்களை விளையாட்டில் உயா்ந்த நிலைக்குக் கொண்டுசெல்ல இந்தத் திட்டம் உறுதுணையாக இருக்கும் என்றாா்.
இந்நிகழ்ச்சியில் குன்னூா் சாா் ஆட்சியா் ரஞ்சித் சிங், மாவட்ட விளையாட்டு அலுவலா் ஜெயசந்திரன், எடப்பள்ளி ஊராட்சித் தலைவா் முருகன், துணைத் தலைவா் கோபால்ராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.