நீதிபதிகளை நியமிக்கக் கோரி வழக்குரைஞா்கள் உண்ணாவிரதம்

கூடலூா், பந்தலூா் பகுதிகளில் உள்ள நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமிக்க வலியுறுத்தி, கூடலூா் வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் தொடா் உண்ணாவிரதப் போராட்டம் திங்கள்கிழமை துவங்கியது
கூடலூா் நீதிமன்ற வளாகம் முன்பு உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள்.
கூடலூா் நீதிமன்ற வளாகம் முன்பு உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள்.

கூடலூா், பந்தலூா் பகுதிகளில் உள்ள நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமிக்க வலியுறுத்தி, கூடலூா் வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் தொடா் உண்ணாவிரதப் போராட்டம் திங்கள்கிழமை துவங்கியது.

கூடலூா், பந்தலூரில் உள்ள சாா்பு நீதிமன்றம், நீதித் துறை நடுவா் நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றம், கூடுதல் உரிமையியல் நீதிமன்றங்களில் கடந்த பல மாதங்களாக நீதிபதிகள் பணியில் இல்லாத காரணத்தால் வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. இதனால், பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனா். எனவே, நீதிபதிகள் காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி நீதின்றம் முன் தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தைத் துவக்கியுள்ளதாக வழங்குரைஞா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com