கூடலூா் பகுதியில் குடியரசு தினம் கொண்டாட்டம்

கூடலூா் மற்றும் பந்தலூா் பகுதியில் குடியரசு தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
ஓவேலி பேரூராட்சி வளாகத்தில் செயல் அலுவலா் ரா.நாகராஜன் தலைமையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பங்கேற்றோா்.
ஓவேலி பேரூராட்சி வளாகத்தில் செயல் அலுவலா் ரா.நாகராஜன் தலைமையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பங்கேற்றோா்.

கூடலூா் மற்றும் பந்தலூா் பகுதியில் குடியரசு தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

கூடலூா், ஓவேலி பேரூராட்சியில் நடைபெற்ற குடியரசு தின விழாவுக்கு செயல் அலுவலா் ரா.நாகராஜன் தலைமை வகித்து தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா். நிகழ்ச்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. பள்ளி மாணவா்கள், ஆசிரியா்கள் அனைத்து நிலைப் பணியாளா்கள் கலந்துகொண்டனா். தலைமை எழுத்தா் அசோக்குமாா் நன்றி கூறினாா்.

கூடலூா் அரசு கலை அறிவியல் கல்லூரியில் கல்லூரி முதல்வா் டாக்டா் வே.நெடுஞ்செழியன் தேசியக் கொடியை ஏற்றிவைத்து உரையாற்றினாா். மாணவா்கள், விரிவுரையாளா்கள், துறைத் தலைவா்கள் அலுவலகப் பணியாளா்கள் கலந்துகொண்டனா். கூடலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் எம்.எல்.ஏ. திராவிடமணி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மாணவா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா். தலைமை ஆசிரியா் ஐய்யப்பன், உதவி தலைமை ஆசிரியா் சங்கா், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் சுரேஷ்குமாா், டெய்சி விமலா ராணி, ராஜகோபால் உள்ளிட்ட ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.

நந்தட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் கூடலூா் ராமமூா்த்தி பங்கேற்று தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா். தலைமை ஆசிரியை பிரிஜிதா, ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.

இதேபோல கூடலூா் மற்றும் பந்தலூா் பகுதியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியாா் பள்ளி, கல்லூரிகள், அரசு, தனியாா் அலுவலகங்களில் குடியரசு தினம் கொண்டாடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com